Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ பற்றியது: பயணிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 13 மே 2019 (17:48 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நிறைய குப்பைகள் நிரம்பி உள்ளது. இன்று பிற்பகலில் திடீரென அந்த குப்பைகளில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். திடீரென்று ஏற்பட்ட தீயால் கோயம்பேடு பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
 
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments