Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்கெட் கேட்ட மூதாட்டி சாட்சியாக சேர்ப்பு என திமுக நிர்வாகி தகவல் !

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (14:07 IST)
கண்டக்டரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் சாட்சியாக மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகி டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார்

இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில், மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது ஓசியில் போகமாட்டேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.

ALSO READ: பேருந்தில் டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு: நெட்டிசன்கள் கண்டனம்!
 
இந்த நிலையில் தற்போது பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து ,  திமுக நிர்வாகி ரஜீவ்காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில்,’’கோயம்புத்தூரில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு வேண்டாம் என்று பிரச்சனை செய்யச் சொல்லி மூதாட்டியை தூண்டி திட்டமிட்டு அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments