Publish Date: Thu, 25 Aug 2022 (15:17 IST)
Updated Date: Thu, 25 Aug 2022 (15:18 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஏழு தமிழர்களில் ஒருவர் நளினி
இவர் ஏற்கனவே சில மாதங்களால பரோலில் இருந்து வரும் நிலையில் தற்போது அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளினிக்கு முதல் முறையாக பரோல் வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 7வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
நளினியின் தாயார் பத்மாவதி உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள பரோலை நீட்டிக்க வேண்டும் என நளினியின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது