Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- விஜயகாந்த்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (20:49 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.  எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

மேலும், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இடைநிலை இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க கூறியிருந்தது.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை முன்வரவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments