Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்..!!

Senthil Velan
வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:21 IST)
சிதம்பரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில்  இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
கடலூர் மாவட்டம் பெண்ணடம் காமராஜர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் பணியின் காரணமாக சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தில் ஏறி சி.கொத்தங்குடி தோப்பு செல்லும் வழியில் திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
 
இதனால் பதறிப் போன மணிகண்டன் மற்றும் காமராஜ் இருவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போது தீ பரவத் தொடங்கியதால் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் மூலம் தீயை அனைத்தனர். 
 
இருப்பினும் காரில் இருந்து புகை அதிகமாக வந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதும் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கார் எப்படி தீப்பற்றி எரிந்தது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ: கஞ்சா சாக்லெட் விற்பனை..! ஒடிசா வாலிபர் கைது..!!
 
காரில் வந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகியோர் காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  சாலையில் சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments