Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடையாள அட்டை காணவில்லை..! தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புகார்..!!

Advertiesment
sathyapradha

Senthil Velan

, புதன், 31 ஜனவரி 2024 (13:05 IST)
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது அடையாள அட்டையை காணவில்லை என்று கோட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  என போலீசில் புகார் அளித்துள்ளார்.


அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச் செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவருடைய அட்டையை காணாமல் போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு