ஏமாற்றிய மதுப்பிரியர்கள்: தலையில் துண்டு போட்ட அரசு??

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (10:13 IST)
டாஸ்மாக் கல்லா கட்டும் என எதிர்ப்பார்த்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கு இடையே டாஸ்மாக் திறந்த போது அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
 
மதுக்கடைகள் திறக்கப்பட்டதோடு கூடுதல் நேரம், கூடுதல் டோக்கன் மதுப்பிரியர்களுக்காக வழங்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கல்லா கட்டும் என எதிர்ப்பார்த்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 
 
ஆம், தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மேலும்  குறைந்துள்ளது. முதலில் ரூ.163 கோடியிலிருந்து ரூ.133 கோடியாக குறைந்த டாஸ்மாக் வருவாய், 3 ஆம் நாளான நேற்று மேலும் குறைந்து ரூ.109 கோடியானது. 
 
இப்படியே நாளுக்கு நாள் டாஸ்மாக் வருமான குறைவது அரசு அதிர்ச்சியை ஏற்படுத்த கூடும். ஏன் என்றால் தமிழக அரசு மது விற்பனையை அரசின் முக்கிய வருமானமாக பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
3 ஆவது நாளான திங்கள்கிழமை விற்பனை நிலவரம்:
மதுரை மண்டலம் - ரூ. 28.6 கோடி
திருச்சி மண்டலம் - ரூ. 27.4  கோடி
சேலம் மண்டலம் - ரூ. 24.3 கோடி
கோவை மண்டலம் - ரூ. 22.5 கோடி
சென்னை மண்டலம் - ரூ. 6.5 கோடி  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தரை வழி தாக்குதல் நடந்தால் உங்கள் வீரர்கள் காணாமல் போவார்கள்!. அமெரிக்க, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!...

அதெல்லாம் கண்முன்ன வந்து போகும்ல!.. விஜயின் ரோட் ஷோவுக்கு பர்மிசன் இல்லை.. போலீஸ் ஆலோசனை!..

விஜய்க்கு பொண்டாட்டியா இருப்போம்!.. விபச்சாரிகளை அப்டிதான் சொல்ல முடியும்.. மன்னிப்பு கேட்க மறுக்கும் பொன்ராஜ்..

வாக்காளர் பட்டியலில் BLO பெயரே இல்லையா? மேற்குவங்கத்தின் தேர்தல் கூத்து..!

போர் முடிய போகிற நேரத்தில் கச்சா எண்ணெயை வாங்கி குவிக்கும் இந்தியா.. குழப்பத்தில் உலக நாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments