Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாநாடு நடத்தவே விஜய் திணறிப் போய்விட்டார்… தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து!

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:50 IST)
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடத்துகிறார். இதற்கான பந்தல்கால் நடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  N ஆனந்த் இந்த பந்தல்கால் ஊன்றி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார்.

கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்காக ஏற்கனவே திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அது நடக்காமல் போனது. இதனால் விஜய் கட்சிக்கு மாநாடு நடத்துவதில் அழுத்தம் தரப்பட்டுள்ளது எனவும், ஒரு மாநாடு நடத்தவே திணறுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விஜய் கட்சி மாநாடு பற்றி பேசும்போது “ஒரு மாநாடு நடத்தவே திணறுகிறார்கள். அரசியல் என்பது ஒரு டேக் (சினிமாவில் எடுக்கப்படும் காட்சி) சொன்னதும் முதல்வர் ஆவது கிடையாது” என கேலியான தொனியில் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments