Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:47 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும், மேற்கு திசை காற்றின் வேக மாற்றம், வளிமண்டல சுழற்சி மற்றும் வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால் பகுதியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை  மாலைஅல்லது இரவு நேரத்தில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments