Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு தேர்வு? – அதிகாரிகள் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:29 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments