Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (10:25 IST)
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளியன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ காற்றால் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் மிதமான அளவில் மழை பெய்துள்ளது. தென் தமிழக பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட கால அவகாசமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி அன்றும் பல பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டிருப்பதால் பட்டாசு பிரியர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments