Publish Date: Tue, 10 Nov 2020 (23:22 IST)
Updated Date: Tue, 10 Nov 2020 (23:25 IST)
நாம் இந்த உலகில் காணக்கிடைக்கும் எத்தனையோ நன்மை தீமைகளைக் காண்கிறோம். தினமும் தீமைகளை எதிர்க்க முடியவில்லை என்றாலும் நாம் நன்மைகள் செய்தாலோ தீமைகள் விலகிவிடும்.
நாம் தேவைக்கு அதிகமான துணிகள் இருந்தால் அதை சென்னை போன்ற நகரங்களில் ஒரு இடத்தில் துணி, புத்தகங்கள் வைக்க ஒரு பெட்டி இருக்கும் அதில் வைத்து அடுத்தவர்களுக்கு உதவலாம்.
தேவைக்கு அதிகமான ஒரு பொருள் இருந்து அது நமக்கும் உதவவில்லை என்றால் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணலாம்.
துன்பபடுகிறவர்களுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேசி அவர்களின் கண்ணீரைத் துடைக்கலாம்.
நாம் காணும் எளியவர்களின் நிலைமை எண்ணிக் கடக்காமல் அவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவி மேற்கொள்ளலாம்.
நம் வழக்கமாக உறவினர்களுக்கும் அருகில் வசிப்போருக்கு மட்டுமே கொடுத்தின்புறுவதுடன் முதியோர் இல்லம், அனாதைகள் ஆசிரமத்துக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை மகிழ்விக்கலாம்.