Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்போறாங்க; மலேசியா சென்ற தமிழக இளைஞர் கதறல்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (16:51 IST)
மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழக இளைஞர் ஒருவர், தன்னை இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்போவதாக கதறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலைக்காக மலேசியாவுக்கு சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்காக மலேசியாவுக்கு சென்றுள்ளார். செல்வம் என்பவர் அவரை ஹோட்டலில் பணியாற்ற அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உணவு கொடுக்காமல், ஊதியம் வழங்காமல் கொத்தடிமை போல் நடத்தியுள்ளனர். இதை கேட்ட அந்த நபருக்கு அடி, உதை விழுந்துள்ளது. 
 
அவர்களிடம் தப்பி சென்று பூங்காவில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கூலிப்படையினர் தன்னை இன்னும் சிறிது நேரத்தில் கொல்லவுள்ளதாக கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் தான் கொல்லப்படுவது உறுதி என்பதால் அதற்கு காரணம் அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற செல்வம்தான் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
தற்போது இந்த நபரை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments