Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மாத ஊரடங்கு: கொரோனாவை வெல்லுமா சென்னை??

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (10:04 IST)
சென்னையில் உள்ள 9 மண்டலங்களில் ஆயிரத்திற்கு குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
நேற்று தமிழகத்தில் 5,864 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5,864 பேர்களில் 1,175 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,767 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஆனால், சென்னையில் உள்ள 9 மண்டலங்களில் ஆயிரத்திற்கு குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டையில் 602 பேர், ராயபுரத்தில் 806 பேர், திருவிக நகரில் 1,137 பேர், அம்பத்தூரில் 1198 பேர், அண்ணா நகரில் 1,453 பேர், தேனாம்பேட்டையில் 1,013 பேர், கோடம்பாக்கத்தில் 1734 பேர், வளசரவாக்கத்தில் 937 பேர், அடையாறு மண்டலத்தில் 1,194 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரே மாதத்தில் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments