Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆரம்பித்த மாநாட்டு வேலை.. போலீசாரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க தவெக முடிவு..!

Mahendran
புதன், 16 அக்டோபர் 2024 (18:18 IST)
தமிழக முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாக, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை வெறித்ததால் மீண்டும் மாநாட்டு பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கின்ற நிலையில், மாநாட்டுக்கு போலீசார் சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி மாநாட்டு பணிகள் பூஜையுடன் தொடங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட கன மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மழை நின்று விட்டதால் மீண்டும் மாநாட்டு பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில், போலீசார் கேட்ட ஐந்து கேள்விகளை தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான பதில் அளிக்கப்பட இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மாநாட்டு பந்தலை சுற்றி அவசர சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் மருத்துவ பணியில், 550 டாக்டர்கள், 150 நர்சுகள் பணிபுரிய இருப்பதாகவும், 15 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், மாநாட்டு பந்தலை பார்வையிட்ட பின்னர் அவர் கூறினார்."
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments