Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு மாநாடு நடத்தவே விஜய் திணறிப் போய்விட்டார்… தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து!

ஒரு மாநாடு நடத்தவே விஜய் திணறிப் போய்விட்டார்… தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து!
, ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:50 IST)
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடத்துகிறார். இதற்கான பந்தல்கால் நடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  N ஆனந்த் இந்த பந்தல்கால் ஊன்றி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார்.

கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்காக ஏற்கனவே திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அது நடக்காமல் போனது. இதனால் விஜய் கட்சிக்கு மாநாடு நடத்துவதில் அழுத்தம் தரப்பட்டுள்ளது எனவும், ஒரு மாநாடு நடத்தவே திணறுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விஜய் கட்சி மாநாடு பற்றி பேசும்போது “ஒரு மாநாடு நடத்தவே திணறுகிறார்கள். அரசியல் என்பது ஒரு டேக் (சினிமாவில் எடுக்கப்படும் காட்சி) சொன்னதும் முதல்வர் ஆவது கிடையாது” என கேலியான தொனியில் விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று காலை 10 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!