Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ், சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா? ஈபிஎஸ் பதில்..!

Mahendran
புதன், 16 அக்டோபர் 2024 (18:12 IST)
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளார். 
 
மேலும் மேற்கண்ட இருவருடன் ரகசியமாக தொடர்பு கொண்டு செயல்படும்வர்களை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், பா.ஜ.க. ஆதரவாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்காணித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டர்களுக்காக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
 
வான் போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்று திருக்குறளை குறிப்பிட்டு, வெளிப்படையான பகைவர்களை அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் நண்பர்களாக இருந்து உள்ளதாக காட்டி உட்பகை கொள்பவர்களை அஞ்சவேண்டும் என வள்ளுவர் நமக்குக் கூறுகிறார். கட்சிக்குத் தேவையற்றவர்களை உட்பகை கொண்டு செயல்பட்டால், அவர்கள் கட்சியில் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி இப்படியான கடிதம் எழுதி கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இது முதன்முறையாகும். மேலும், மாவட்ட அளவில் தலைமை தாங்கிய சில முன்னாள் அமைச்சர்களை திடீரென நீக்கியதும் கட்சி வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments