ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:33 IST)
சமீபத்தில் தொகுதி மறு வரையறை குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், தற்போது நீட் தேர்வை அகற்றுவதற்கு சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவில் கொண்டு, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும் என்றும், எதிர்காலத்தில் நீட் தேர்வை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நினைவில் கொண்டு, தமிழக அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments