Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

Mahendran
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (13:10 IST)
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க இம்மாதம் ஆறாம் தேதி வரவிருக்கின்ற நிலையில், அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு ராமேஸ்வரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்த நிலையில், அதிமுக தலைவர்களில் சிலரும் டெல்லி சென்றனர்.
 
இந்த நிலையில், நாளை மறுநாள் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியே சந்திக்க இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சந்திப்பின்போது பாஜக - அதிமுக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும், அதுமட்டுமின்றி அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் இணைவது குறித்த தகவலும் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

எடப்பாடியார் குறி புலிதான்.. அணில் இல்லை! குறி வெச்சா இரை விழணும்! - ஆர்.பி.உதயக்குமார்!

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments