Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு அரசியல் ஆதரவு: இப்போதே வாக்கு கொடுத்த சுவாமி!!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (12:51 IST)
ரஜினிக்கு அரசியலில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

 
விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.   
 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாகவும் கூறினார். 
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சிஏஏ-வால் எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமையும் பறிக்க போவதில்லை. இந்துக்கள் ஒற்றுமையை கெடுத்து, அதன் மூலம் நாட்டின் பெயரை கெடுப்பதற்காகவே சிலர் சதி செய்து வருகின்றனர்.
 
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் எப்படி இந்து மதத்திற்காக குரல் கொடுத்தாரோ, அதேபோன்று எதிர்காலத்திலும் அவர் தொடர்ந்து பேசினால், அரசியலில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments