Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Yes Bank-ஐ வச்சி செய்யும் மத்திய அரசு? நிர்மலா சீதாராமன் சொன்ன செய்தி!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (12:17 IST)
ரிசர்வ் வங்கியின் பிடிக்கு வந்துள்ள யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ முன்வந்துள்ளது.
 
இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே யெஸ் வங்கியை கவனித்து கொண்டிருக்கின்றோம். இந்த பாதிப்பு திடீரென ஏற்பட்டது அல்ல.  யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments