Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்: மாணவர்கள் தூக்குப்போட்டு நூதன போராட்டம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (15:58 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் பச்சை துண்டால் தூக்குப்போட்டு நூதன போராட்டம் செய்தனர்
 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன.
 
இந்நிலையில், தஞ்சயை அடுத்த வல்லம் பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு மாணவர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில், மாணவர்கள் பச்சை துண்டால் தூக்குப்போட்டு நூதன போராட்டம் செய்தனர். 
 
இந்த போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவர்களை பேசி சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments