Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்மபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: திடீரென மாற்றப்பட்ட விசாரணை அதிகாரி

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (20:45 IST)
தர்மபுரியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை விசாரணை செய்து வந்த, விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர்  என்ற பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதனையடுத்து கொலை வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சதிஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். முதலில் தலைமறைவான சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் இன்று ரமேஷும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி என்பவர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்