இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது: வேல்முருகன் எம்.எல்.ஏவை எச்சரித்த சபாநாயகர்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (12:40 IST)
இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரை பேசுவதற்காக சபாநாயகர் அப்பாவு அழைத்தார். அப்போது தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தன்னை துணை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் 
 
துணைக் கேள்வி கேட்க யாரை அனுமதிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று நீங்கள் உட்காருங்கள் என்றும் சபாநாயகர் கூறினார். இதனை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் பேச வேண்டும் எனக்கூற இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது உட்காருங்கள் என்று கடுமையாக கூறியதை அடுத்து அமைச்சரை பேசுமாறு அழைத்தார். மேலும் வேல்முருகன் பேசுவது எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி இருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு அவரிடம் கடுமையாக நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments