Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறைக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சி: குளத்தில் 5 பேர் மூழ்கிய சம்பவம் குறித்து அமைச்சர்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (12:30 IST)
நேற்று சென்னை அருகே கோவில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்த கவனம் தீர்மானத்திற்கு பதில் அளித்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலைத்துறைக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சி இது என்று தெரிவித்தார். 
 
சென்னை அருகே மூவரசம்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் நேற்று 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்
 
சென்னையை அடுத்த மூவரசம்பட்டியில் உள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இந்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து அறநிலைத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது அறநிலையத்துறைக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments