Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது..!

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (12:44 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை ஐஐடி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வரும் ஒரு மாணவி, விடுதியில் தங்கியிருந்தபோது, நேற்று பொங்கல் பண்டிகையை ஒட்டி  கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை அடுத்து அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து, போலீசார் அந்த டீக்கடைக்கு விரைந்து வந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை விசாரணை செய்ததில், அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஸ்ரீராம் என்றும், வயது 29 என்றும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றன.

மாணவியின் புகாரின் பேரில், அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மக்களிடையே பிரச்சினையில்லை! மதவாதிகள்தான் பிரச்சினை! - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

டிரம்புக்கு நல்ல புத்தி தரணும்.. ஹனுமன் கோவிலில் வேண்டுதல் செய்யும் குஜராத் மக்கள்..!

இன்று முதல் வெயில் அதிகரிக்கும்.. 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

ஞானசேகரனுக்கு இன்று இன்று குரல் பரிசோதனை! ரத்த பரிசோதனை எப்போது?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. டெல்லியில் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக?

அடுத்த கட்டுரையில்