Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகனுக்கு புதிய பதவி: ஓபிஎஸ் அறிவிப்பு

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (18:16 IST)
வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகனுக்கு புதிய பதவி: ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். 
 
அதிமுகவின் ஒருங்கிணைந்த வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகனுக்கு ஓபிஎஸ் புதிய பதவி அளித்துள்ளார். அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இன்று முதல் அவர் ஓபிஎஸ் பிரிவு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவப்பிரசாத், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments