Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருத்தர் ஏந்துனா பிச்சை..பலர் ஏந்தினால் இலவசம்! – சீமான் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (11:12 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நா.த.க சீமான் ஒருவர் கையேந்தினால் பிச்சை.. பலர் ஏந்தினால் இலவசம் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் நா.த.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “ஒருவர் கையேந்தினால் பிச்சை. அதுவே பலர் கையேந்தினால் இலவசம். நாம் தமிழர் ஆட்சியில் மற்ற கட்சிகள் போல இலவச துவைக்கும் எந்திரம், குளிரூட்டி போன்றவை வழங்கப்படாது. ஆனால் அவற்றை மக்களே வாங்கி கொள்ளும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும். நாம் தமிழர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி, உலக தரத்திலான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments