Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன்: சீமான்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:32 IST)
நான் முதலமைச்சரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து மீன் பிடிக்க அனுப்பி வைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இது குறித்து கூறிய போது நான் முதல்வரானால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக மீனவர்கள் கையில் வெடிகுண்டு ஆயுதம் கொடுத்து அனுப்புவேன் என்று தெரிவித்தார்.
 
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மோடி போட்டியிடுவதாக வெளியான தகவலால் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தை அங்கு நடத்தி இருக்கின்றோம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments