Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுனர் அரசியல் பேச வேண்டும்: நாம் தமிழர் சீமான் பேட்டி..!

Seeman
, ஞாயிறு, 9 ஜூலை 2023 (13:32 IST)
ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியபோது, ‘திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் என்று தெரிவித்தார். 
 
மேலும் மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அண்ணாமலை பேச வேண்டியதெல்லம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்று கூறினார். 
 
மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய நீங்கள் யார்? என கேள்வி எழுப்பிய சீமான், ‘"ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது என்று கூறினார்.
 
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம் என்றும், இதற்கு முன்பாக, மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்,.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 தங்க பதக்கங்கள் வென்ற நாகப்பட்டிண மீனவரின் மகளுக்கு சத்குரு பாராட்டு!