Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதியின் தூண்டுதலால் தான் என் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகள்: சவுக்கு சங்கர்

Savuku Sankar

Mahendran

, புதன், 31 ஜூலை 2024 (16:56 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூண்டுதலால் தான் என் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெண் காவலர்களை அவமதித்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் இன்று சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். 
 
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து அவர் வெளியே வந்த போது போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே பத்திரிகையாளர்களை நோக்கி கோஷம் எழுப்பினார். 
 
அப்போது உதயநிதி ஸ்டாலின் வற்புறுத்தலின் பெயரில் தான் என் மீது அடுக்கடுக்கான பொது வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக முழக்கமிட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை பாதுகாப்பாக சென்னை புழல் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. உடல்நலக்குறைவா?