Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களாக உண்ணாவிரதம்: கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (14:09 IST)
கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதை அடுத்து அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நீதிபதிகள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்தது குறித்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்
 
தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments