Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட நாட்களுக்குப் பின் பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர்

Xi Jinping
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (22:10 IST)
நீண்ட நாள் கழித்து இன்று பொதுவெளியில் தோன்றிய நிலையில், சீன அதிபர் ஜின்பிங்  குறித்த வந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

சமீபத்தில், உஸ்பெகிஸ்தான்   நாட்டில் நடந்த  எஸ்.சி ஓ மாநாட்டில் கலந்து கொண்ட சீனா அதிபர் ஜின்பிங்  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி பெயிங் திரும்பினார்.

அப்போது, சசீனா விமான நிலையத்திலேயே அவர் சீன ராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டு, வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டதாகத் தகவ வெளியாகிறது.;

மேலும், சீனாவில்  80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணுவகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது சீனா முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கபப்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியானதால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு  ஏற்பட்டது.

சீன அதிபர் ஜின்பிங் சில நாட்களாகப் பொதுவெளியில் தலைகாட்டாத நிலையில்,  சீனாவில் நடந்து வரும் கண்காட்சியில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால்,  அவர் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி!