Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா!? – விரைவில் விடுதலையா?

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (08:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா விடுதலையை எதிர்பார்த்து அமமுகவினர் காத்துள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை சசிகலா செலுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அமமுக தரப்பிலோ எந்த விதமான கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளதால், அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார்போல டிடிவி தினகரனும் கட்சி பணிகளை விடவும் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லிக்கு பயணமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சசிகலா ஜனவரிக்குள் விடுதலையாவார் என அமமுக தரப்பில் பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.10.10 கோடியை சசிகலா நீதிமன்றத்திற்கு காசோலையாக செலுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா விடுதலை செய்யப்படும் நாள் விரைவில் தெரிய வரும் என அமமுகவினர் ஆவலாக காத்துள்ளனர்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments