அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சசிகலா, ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

Mahendran
வியாழன், 6 ஜூன் 2024 (10:02 IST)
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டும் இன்றி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிமுக சரியாக கூட்டணி அமைக்காதது, அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களை வெளியேற்றியது ஆகியவை தான் தோல்விக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என சசிகலா மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர் 
 
அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம், அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும் என்றும், அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் கூறிய இந்த கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments