Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர கண்காணிப்பில் சசிகலா; எடப்பாடி பழனிச்சாமி: உளவுத்துறை ரொம்ப பிஸி!

தீவிர கண்காணிப்பில் சசிகலா; எடப்பாடி பழனிச்சாமி: உளவுத்துறை ரொம்ப பிஸி!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (12:31 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை தமிழக உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய உளவுத்துறை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
சசிகலா பரோலில் வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச முயற்சிப்பார் என கூறியிருந்தோம். அதே போல இளவரசியின் மகன் விவேக் மூலம் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி பலனற்றதாய் போனது.
 
எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் போனுக்கு கால் செய்த விவேக் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச வேண்டும் போனை முதல்வரிடம் கொடுங்கள் என கூறினார். இந்த தகவல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் போனை வாங்காமல் அவரிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
 
இதனையடுத்து கணவரை சந்திக்க சசிகலா செல்லும் போது அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை மூலம் சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக கண்காணித்து வருகிறாராம். அதே நேரத்தில் சசிகலாவுடன் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்ததற்கு முக்கிய காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
 
சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி மாநில உளவுத்துறை மூலம் கண்காணித்து வருவது போல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் தொடர்பில் உள்ளாரா என்பதை மத்திய உளவுத்துறையும் கண்காணிக்கலாம் என கூறப்படுகிறது. அதனாலே அவர் சசிகலாவிடம் பேசுவதை நிராகரித்திருக்கலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments