Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது கணவரை காப்பாற்றும்படி மருத்துவர்களிடம் கண்ணீர் விட்ட சசிகலா

தனது கணவரை காப்பாற்றும்படி மருத்துவர்களிடம் கண்ணீர் விட்ட சசிகலா
, திங்கள், 9 அக்டோபர் 2017 (11:10 IST)
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா கணவர் நடராஜனை நேற்று 2வது நாளாக பார்த்துள்ளார். அப்போது சைகையில் சசிகலாவுடன் நடராஜன் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட வி.கே.சசிகலா, அவரது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5  நாள் பரோலில் சென்னை வந்து தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். 
 
இதனையடுத்து மருத்துவமனையில் நடராஜனை சந்தித்த சசிகலாவின் சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது மருத்துவர்கள் சசிகலாவிடம் நடராஜன் உடல் நிலை தேறிவருதாகவும் இன்னும் 10  நாட்களில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர். பின்னர் 3 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளில் அவர் ஈடுபடலாம்” எனவும் மருத்துவர்கள் கூறிட்யுள்ளனர். அப்போது மருத்துவர்களை கையெடுத்து  கும்பிட்ட சசிகலா “என் கணவரை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். எனவே, அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும், அவர் உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்” என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
 
அதற்கு சசிகலா கணவர் நடராஜன் நான் நலமாக இருக்கிறேன் என்னை பற்றி கவலைப்படாதே என சசிகலாவிடம் சைகையின்  மூலமாக கூறியதாக தகவல்கள் தெரிவிகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொட்டும் மழையிலும் குடையை மறுத்த குடியரசு தலைவர்