வேட்பு மனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்! – சமக சரத்குமார் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (11:59 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 19ம் தேதி முடிய உள்ள நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் தொடங்க உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை நடந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள சரத்குமார் “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் போராட்டம் நடத்தி வருவதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கிகள் மூலமாக கணக்கு தொடங்குதல் மற்றும் பணம் செலுத்துதலில் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய 19ம் தேதியே கடைசி என்னும் நிலையில் இரண்டு நாள் வங்கிகள் போராட்டத்தை கணக்கில் கொண்டு கடைசி தேதியை நீட்டிக்க தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட உரிமையாளர்: ரூ.1,050 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓட்டு போட சொல்லி அடம்பிடிங்க!. குழந்தைகளிடம் சொன்ன விஜய்க்கு எதிராக வழக்கு..

அரவிந்த் கெஜ்ரிவால் குண்டர்களை வைத்து என்னை அடித்தார்.. பெண் எம்பியின் பகீர் குற்றச்சாட்டு..!

300 ருபாய் லஞ்சம்.. செல்போன் பயன்படுத்தி காப்பியடித்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. தீவிர விசாரணை

கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments