Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா! – விடுதியிலேயே தனிமைப்படுத்தல்!

திருச்சியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா! – விடுதியிலேயே தனிமைப்படுத்தல்!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (10:47 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திருச்சி அரசு கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த முறை மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் 9 பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 14 மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் அவர்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விடுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் தொடக்கத்தில் மூடப்படுமா பள்ளிகள்!?? – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!