Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை.. கோவில் உண்டியலும் காலி! – விராலிமலையில் மர்ம கும்பல்!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (09:43 IST)
விராலிமலையில் ஒரே நாள் இரவில் கடைகள், கோவிலில் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் சில பூட்டு உடைக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எலெக்ட்ரானிக் கடைகள், கணினி கடைகள் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான மடிக்கணினி, மின்னனு சாதனங்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையும் அந்த மர்ம கும்பலே செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒருநாள் இரவில் 8 கடைகள், ஒரு கோவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments