Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

Siva
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (07:08 IST)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் அதிமுக-பாஜக கூட்டணியை பற்றிய பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கூடுதலாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக பாஜகவிடம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அமித் ஷாவை சந்தித்தபோது கூட்டணி குறித்து எந்தவிதமான பேச்சுகளும் நடைபெறவில்லை என்று பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், செங்கோட்டையனும் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அவரும் அமித் ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால், தமிழக அரசியலில் அதிமுகவை பிரிக்க பாஜக "ஆபரேசன் தாமரை" நடத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி செங்கோட்டையன் எந்த விளக்கமும் அளிக்காததை கேள்வி எழுப்பியபோது, "மௌனம் அனைத்தும் நன்மைக்கே" என்ற சற்றே மர்மமான பதிலை மட்டுமே அவர் வழங்கினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments