Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’, 15 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (08:25 IST)
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் பல பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை முதலாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments