Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை அடிக்கவே தயங்கிய அபிராமி இப்படி செய்தது ஏன்? கணவர் விஜய் பகீர் வாக்குமூலம்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (10:32 IST)
அபிராமி இதுவரை குழந்தைகளை அடித்த்து கூட இல்லை என அவரது கணவர் விஜய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் பெற்ற குழந்தைகளையே தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கொடூர பெண்மணி அபிராமியை அவரது கள்ளக்காதலனான சுந்தரத்தை வைத்து நாகர்கோவிலில் கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் அவரது கணவர் விஜய் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அபிராமி குழந்தைகளை இதுவரை அடித்ததே இல்லை. குழந்தைகளின் படிப்பு மற்றும் தேவைகளை அபிராமியே சிறப்பாக செய்து வந்தார். 
 
அப்படி இருக்கும் வேளையில் அபிராமி இப்படி செய்திருப்பது ஆச்சரியமாகவும் வேதனை அளிக்கும் விதமாகவும் உள்ளது என்றும் சுந்தரத்தின் மீதான கள்ளக்காதல் மோகமே அபிராமியை பெற்ற குழந்தைகளை கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பது வேதனை அளிப்பதாக  விஜய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments