Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
திங்கள், 27 மே 2024 (12:48 IST)
ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பாதுகாத்து வந்த எஸ்ஐ திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள கல்லூரி வளாகம் மற்றும் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளரின் முகவர்கள், வருவாய் துறை சேர்ந்தவர்கள் மற்றும் காவல் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மூன்று ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவர் நேற்று இரவு வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு மயங்கி விழுந்தார்.

இதனை அடுத்து அவர் உடனடியாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை மரியாதையுடன் ரவிச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments