வீரப்பன் சகோதரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Webdunia
புதன், 11 மே 2022 (14:16 IST)
mathaiyan
சந்தன கடத்தல் வீரப்பன் சகோதரர் மாதையன் கடந்த பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
1. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் சகோதரர் மாதையன்  34 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார். பல நிகழ்வுகளில் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், மாதையனுக்கு மட்டும் சிறைக் கதவுகள் திறக்க மறுக்கின்றன.
 
மாதையனுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  ஆனாலும் கூட  அவரை விடுதலை செய்ய பல ஆண்டுகளாக தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல!
 
74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.  அவர் பல முறை நெஞ்சுவலிக்காக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலையை  கருத்தில் கொண்டாவது மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments