Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்க சொல்லவும் மாட்டாங்க.. செய்யவும் மாட்டாங்க! – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி??

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு குறித்து பாமக ராமதாஸ் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு அமைந்த கூட்டணியே தொடருமா அல்லது புதுக்கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் ஆட்சியை பங்கிட்டு கொள்ள பாமக பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்.

இதனால் பாமக கோரிக்கைகளுக்கு அதிமுக செவிசாய்க்காததால் பாமக தரப்பில் அதிருப்தி இருப்பதாகவும், அதன் காரணமாக பூடகமாக இவ்வாறு ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments