Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்க சொல்லவும் மாட்டாங்க.. செய்யவும் மாட்டாங்க! – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி??

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு குறித்து பாமக ராமதாஸ் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு அமைந்த கூட்டணியே தொடருமா அல்லது புதுக்கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் ஆட்சியை பங்கிட்டு கொள்ள பாமக பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்.

இதனால் பாமக கோரிக்கைகளுக்கு அதிமுக செவிசாய்க்காததால் பாமக தரப்பில் அதிருப்தி இருப்பதாகவும், அதன் காரணமாக பூடகமாக இவ்வாறு ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments