Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டத்திற்கு ஒரு வாட்ஸ் அப் குரூப்: டெக்னாலஜியை முழுமையாக பயன்படுத்தும் ரஜினி

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (23:54 IST)
பொதுவாக அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் வயதானவர்கள் டெக்னாலஜியை பெரும்பாலும் விரும்புவதில்லை. அப்படியே அதை உபயோகித்தாலும் ஓரளவுதான் அதில் ஈடுபடுவார்கள்

ஆனால் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க தனது அரசியல் பாதையை டெக்னாலஜி மூலமே வளர்க்க விரும்புகிறார். இணையதளம் மற்றும் செயலி மூலம் உறுப்பினர்கள் சேர்க்கையை ஆரம்பித்த ரஜினிகாந்த், தற்போது தனது மன்ற நிர்வாகிகள் மூலம் வாட்ஸ் அப் குரூப் மீது கவனம் செலுத்தியுள்ளார்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அதற்கான அட்மின் எண்ணையும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் ரஜினியும் அவரது ரசிகர்களும் 24 மணி நேரமும் தொடர்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments