Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் திடீர் இமயமலை பயணம்: அரசியல் என்ன ஆயிற்று?

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (11:12 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றில் கட்சி ஆரம்பித்து நேற்று சென்னையில் இரண்டாவது கூட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டார். வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியிலும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு முன்பே கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், இன்னும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் பட்டியலையே தேர்வு செய்து முடிக்கவில்லை

இந்த நிலையில் நாளை ரஜினிகாந்த் இமயமலை செல்கிறார். சென்னையில் இருந்து சிம்லா வரை விமானத்தில் சென்று பின்னர் ரிஷிகேஷ் செல்லும் ரஜினி, அங்கு தான் கட்டிக்கொண்டிருக்கும் பாபா ஆசிரமத்தை பார்வையிடுகிறார். சுமார் ஒருவார காலம் அவர் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்ட பின்னர் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த பயணத்தில் ரஜினி தனது குருக்களை சந்தித்து அரசியல் பயணம் குறித்த ஆலோசனைகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments