காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (10:23 IST)

இன்று காலை முதலே டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதலாக தொடர்ந்து பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

நேற்று இரவு முதலே தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை காலை வரையிலும் நீடித்தது.

 

இந்நிலையில் இன்று கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments