Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சிலமணி நேரத்தில் இடியுடன் மழை.. கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பா?

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (16:56 IST)
சென்னையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வளிமண்டலத்தின் மேல் நிலவும் கீழடுக்கு திசை காற்று காரணமாக சென்னையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் 40 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments